search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் அருகே தீக்குச்சிகள் உரசியதில் வீடு எரிந்து பெண் பலி
    X

    குடியாத்தம் அருகே தீக்குச்சிகள் உரசியதில் வீடு எரிந்து பெண் பலி

    • தீ விபத்து ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஊசூராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள வீட்டில் குடிசைத் தொழிலாக தீப்பெட்டிகள் செய்து வருகிறார்.

    இன்று காலை 8 மணி அளவில் முருகையன் மற்றும் அவரது தங்கை சுகுணா (56) ஆகியோர் மருந்துகள் பொருத்திய தீக்குச்சிகளை, சாக்கு பைகளில் கொட்டினர். அப்போது தீக்குச்சிகள் ஒன்றோடு ஒன்று உரசி திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகையன் மற்றும் சுகுணா ஆகியோர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவியதால், 2 பேர் மீது தீப்பற்றி எரிந்தது.

    இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். விபத்தில் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுணா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீ விபத்து ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×