

குளச்சல் பகுதியில் குமரி மாவட்ட விசை படகு மீனவர் சங்க நிர்வாகிகளை விஜய் வசந்த் எம்.பி. நேற்று சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
குளச்சல் துறைமுகத்தில் மீனவர் வசதிக்காக நிழற்கூடம் அமைப்பது குறித்தும், துறைமுக விரிவாக்க பணிகள் குறித்தும் அவர் கலந்தாலோசித்தார்.
இந்த ஆய்வின் போது குமரி மாவட்ட விசைப்படகு மீன்பிடிப்பவர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் யூசப்கான், லாரன்ஸ், முனாப், ஸ்வீற்றன், ஸ்டார்வின், ரமேஷ், லாலின், பிரான்சிஸ், மாகின், சுமன், பிராங்கிளின், அந்திரியாஸ் உட்பட பலர் உடன் இருந்தனர்.