ராஜபாளையம் அருகே கால்நடை மருத்துவ முகாம் - தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

வாயில்லா ஜீவன்களான கால்நடைகளின் நலன்காக்க கால்நடைகள் இருக்கும் பகுதிக்கே சென்று மருத்துவ முகாம் நடத்தும் சிறப்பு வாய்ந்த திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் என்றார்.
தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.
தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் தொகுதி புத்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடை துறை துணை இயக்குநர் கோவில்ராஜ் முன்னிலை வகித்தார்.

தங்கப்பாண்டியன் எம். எல்.ஏ., யூனியன் சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், “மக்களை தேடி மருத்துவம்“ என்ற திட்டம் மூலம் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று மருத்துவம் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் வாயில்லா ஜீவன்களான கால்நடைகளின் நலன்காக்க கால்நடைகள் இருக்கும் பகுதிக்கே சென்று மருத்துவ முகாம் நடத்தும் சிறப்பு வாய்ந்த திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் என்றார்.

அதனைத் தொடர்ந்து முகாமை பார்வையிட்டு கால்நடைகளுக்கு மருந்துகளையும், உணவுகளையும் வழங்கினார். மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்தவர்களுக்கு பரிசுகளை எம்.எல்.ஏ. வழங்கினார்.

உதவி இயக்குநர் ராஜேஸ்வரி, கவுன்சிலர் நவமணி, தி.மு.க. பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி, ஒன்றிய துணை செயலாளர் நல்லுச்சாமி, கிளை செயலாளர்கள் பாலகணேஷ், கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com