search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மத்திய பாதுகாப்பு படை வீரர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலி
    X

    கோப்பு படம்.

    வேலூர் மத்திய பாதுகாப்பு படை வீரர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலி

    • இரும்பாலை வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் கேட் பகுதியில் வந்த போது திடீரென நிலை தடுமாறிய ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார்.
    • விபத்து குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெயக்குமார் (38).

    கடந்த 2010-ம் ஆண்டு மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரராக பணியில் சேர்ந்த ஜெயக்குமார் தொடர்ந்து சேலம் இரும்பாலையில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், 5 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று பணியில் இருந்த அவர் பணியை முடித்து விட்டு இரவு 9.50 மணிக்கு வீட்டிற்கு புறப்பட்டார். இரும்பாலை வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் கேட் பகுதியில் வந்த போது திடீரென நிலை தடுமாறிய ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார்.

    இதில் காயம் அடைந்த அவரை இரும்பாலை ஊழியர்கள் மீட்டு சேலம்-பெங்களூரு சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 3.50 மணிக்கு ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளது. அவரது உடலுக்கு இரும்பாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் இரும்பாலை ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×