

சென்னை:
வேளச்சேரி செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான 690 சதுரடி உள்ள மனைகளை சென்னை இணை ஆணையர் உத்தரவின்படி ஆக்கிரமிப்பு கட்டிடங்களை பூட்டி இலாக்கா முத்திரையிட்டு சுமார் ரூ.57 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் கோவில் வசம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிகழ்வின்போது, சென்னை மண்டல உதவி ஆணையர் பெ.க.கவெனிதா, வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, கோவில் செயல் அலுவலர் திவ்யா, காவல் துறை அதிகாரிகள் மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.