search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவேற்காட்டில் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    திருவேற்காட்டில் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

    • பிளஸ்-2 தேர்வு முடிவில் திவாகர் தமிழ், கணிதம் ஆகிய 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.
    • பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் திவாகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு, வி.ஜி.எஸ் நகரை சேர்ந்தவர் வினோத். இவரது மகன் திவாகர்(வயது17). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து இருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் திவாகர் தமிழ், கணிதம் ஆகிய 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.

    இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை திவாகர் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது திடீரென அவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் பெற்றோர் வீட்டுக்கு வந்த போது மகன் திவாகர் தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் திவாகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதுக்குறித்து திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×