search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவான்மியூரில் கடலில்  படகு கவிழ்ந்து  மீனவர் பலி
    X

    திருவான்மியூரில் கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

    • சக்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (28), மீன் பிடிக்கும் தொழில் செய்து வரும் இவர் தன்னுடைய நண்பரான ராஜேஷ் (38) மற்றும் ராஜேஷின் தந்தை குப்பன் ஆகியோருடன் (65) மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளார்,

    அப்போது அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் மூவரும் கடலில் விழுந்தனர். இதில் படகுக்கு அடியில் சக்திவேல் மாட்டிக் கொண்டார். அதைத்தொடர்ந்து சக்திவேலை மீட்ட ராஜேஷ் மற்றும் குப்பன், அவரை கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அடையாறில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.,

    சக்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக திருவான்மியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×