திருக்கோவிலூர் அருகே நூதனமுறையில் மணல் கடத்தும் கும்பல்

திருக்கோவிலூர் அருகே நூதனமுறையில் மணல் கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல்
மணல்
Published on

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் காங்கியனூர் கிராமத்தில் மணல் திருட்டு நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.

அதன் பேரில் விரைந்து சென்ற மணலூர்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த டெம்போவில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தப்பட்டு வந்திருப்பது தெரிந்தது மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மேட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 39) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் கள்ளிப்பட்டி கிராமத்தில் மொபட்டில் மணல் கடத்திய அய்யப்பன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து 5 மூட்டை மணல் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அய்யப்பன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் ஜம்பை கிராமத்தில் சதீஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் 5 மூட்டை மணல் கடத்திய போது போலீசார் மடக்கி பிடித்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com