என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோயம்பேட்டில் மோட்டார் சைக்கிளில் தீப்பிடித்து உடல் கருகிய இளம்பெண் பலி
    X

    கோயம்பேட்டில் மோட்டார் சைக்கிளில் தீப்பிடித்து உடல் கருகிய இளம்பெண் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    சென்னை, வியாசர்பாடி, சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகள் ரோகிணி (வயது25). மதுரவாயலில் உள்ள பிரபல எண்ணெய் நிறுவனத்தில் ஏரியா வினியோகஸ்தராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் ஒரு கேனில் பெட்ரோல் வாங்கிவிட்டு அதனை ஒரு பையில் போட்டு மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் தொங்க விட்டு இருந்தார். அதே பையில் தனது செல்போனையும் வைத்து இருந்தார்.

    கோயம்பேடு காமராஜர் சாலை, லட்சுமி நகர் முதல் தெருவில் வந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் இருந்து பெட்ரோல் கேன் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்தது. இதில் ரோகினி உடல் கருகினார்.

    ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரோகிணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×