search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
    X

    பழனி அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

    • வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராமராஜ் தனது தந்தையை அடித்து கீழே தள்ளினார்.
    • பலத்த காயமடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பழனி:

    பழனி அருகில் உள்ள அமரபூண்டியை சேர்ந்தவர் ராமசாமி(80). இவரது மகன் ராமராஜ்(50). கூலித்தொழிலாளி. ராமசாமியால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் இவரது மகனிடம் செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார்.

    ஆனால் அவர் பணம் தராததால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதேபோல் இன்றும் தனது மகனிடம் ராமசாமி பணம் கேட்டார். அதற்கு ராமராஜ் பணம் தர மறுத்ததுடன் தகாத வார்த்தையால் திட்டினார். அவர் பணம் தராமல் வீட்டைவிட்டு செல்லகூடாது என கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ராமராஜ் தனது தந்தையை அடித்து கீழே தள்ளினார். பலத்த காயமடைந்த ராமசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து ராமராஜை கைது செய்தனர்.

    Next Story
    ×