search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ணாரியம்மன் கோவில் சப்பரம் முன்பு தரையில் படுத்து வழிபட்ட பள்ளி மாணவிகள்
    X

    பண்ணாரியம்மன் கோவில் சப்பரம் முன்பு தரையில் படுத்து வழிபட்ட பள்ளி மாணவிகள்

    • காலை முக்கிய வீதி வழியாக ஊரைச் சுற்றி அம்மன் வலம் வந்தார்.
    • சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொணடு அம்மனை மனமுருகி வழிபட்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

    விழாவையொட்டி அம்மன் சப்பரம் வீதி உலா தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து அம்மன் சத்தியமங்கலம் மற்றும் பு.புளியம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அம்மன் சப்பரம் வீதி உலா வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சப்பரம் முன்பு படுத்தும் நேர்த்தி கடன் செலுத்தி வருகிறார்கள்.

    இதே போல் புஞ்சை புளியம்பட்டி அடுத்து வெள்ளியம்பாளையம் மற்றும் கொத்தமங்கலம், நெருஞ்சிப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பாரத்தில் பண்ணாரி மாரியம்மன் உடன் சருகு மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனைத் தொடர்ந்து கொத்தமங்கலம் பரிசல் துறைக்கு சென்று பகுடுதுறை கோவிலில் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தொட்டம்பாளையம் கிராமத்துக்கு சப்பரத்தில் சென்ற பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் இரவு அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து காலை முக்கிய வீதி வழியாக ஊரைச் சுற்றி அம்மன் வலம் வந்தார். வழியெங்கும் இதைக் கண்டு ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் படுத்தபடி பண்ணாரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற அருள் புரிய வேண்டும் என வேண்டி கொண்டனர்.

    தொடர்ந்து வெள்ளியம்பாளையம் புதூர், இக்கரை தத்தப்பள்ளி ஊருக்கு சென்று திருவீதி உலா நடைபெற்றது. பண்ணாரி மாரியம்மன் உடன் சருகு மாரியம்மன் பரிசலில் அக்கறை தத்தப்பள்ளி மற்றும் உத்தண்டியூரில் திருவீதி உலா நடந்தது.

    இதில் சாலைகளில் வழி நெடுக பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொணடு அம்மனை மனமுருகி வழிபட்டனர்.

    Next Story
    ×