புவனகிரி அருகே சாத்தப்பாடி ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புவனகிரி அடுத்த சாத்தபாடி ஏரியில் விவசாயிகள் பலர் ஆக்கிரமித்து நெல் உள்ளிட்ட வேளாண் பயிர்களை சாகுபடி செய்திருந்ததை சிதம்பரம் நீர்வளத்துறை கொள்ளிடம் வடிநில கோட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஏரி
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஏரி
Published on

புவனகிரி:

புவனகிரி அருகே சாத்தபாடி ஏரி 240 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரியில் பல்வேறு விவசாயிகள் பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து நெல் மற்றும் பல்வேறு வேளாண் பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிட ம் பலமுறை தகவல் கூறியும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளவில்லை. பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி புவனகிரி அடுத்த சாத்தபாடி ஏரியில் விவசாயிகள் பலர் ஆக்கிரமித்து நெல் உள்ளிட்ட வேளாண் பயிர்களை சாகுபடி செய்திருந்ததை சிதம்பரம் நீர்வளத்துறை கொள்ளிடம் வடிநில கோட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செயற்பொறியாளர் கந்தரூபன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் குமார் அடங்கிய குழுவினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை மீட்டு பல ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஏரிக்கு கரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல் பல்வேறு இடங்களிலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் கந்தரூபன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com