search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்கோட்டையில் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    ஊத்துக்கோட்டையில் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து கொள்ளை முயற்சி

    • காலையில் ஊழியர்கள் வங்கிக்கு வந்தபோது ஜன்னல்கம்பி உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • கொள்ளையனின் திட்டம் தோல்வியில் முடிந்ததால் வங்கியில் இருந்த பல லட்சம் பணம், நகைகள் தப்பியது.

    திருவள்ளூர்:

    ஊத்துக்கோட்டை அடுத்த பாலவாக்கம் பகுதியில் வங்கி உள்ளது. இந்த வங்கியில் 500-க்கும் மேற்பட்டோர் சேமிப்பு மற்றும் நகைகடன் கணக்கு வைத்து உள்ளனர். மாலையில் பணி முடிந்ததும் ஊழியர்கள் வழக்கம் போல் வங்கியை பூட்டி விட்டு சென்றனர். இந்தநிலையில் நள்ளிரவில் வந்த மர்ம வாலிபர் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்றான். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயன்றபோது ஒலி எழுந்ததால் மர்ம வாலிபர் கொள்ளை திட்டத்தை கைவிட்டு தப்பி சென்று விட்டான்.

    இதற்கிடையே காலையில் ஊழியர்கள் வங்கிக்கு வந்தபோது ஜன்னல்கம்பி உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் பணம் வைத்துள்ள லாக்கரை உடைக்க முயன்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் வைத்தியநாதன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    கொள்ளையனின் திட்டம் தோல்வியில் முடிந்ததால் வங்கியில் இருந்த பல லட்சம் பணம், நகைகள் தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×