

பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள வெள்ளகுளம் ரெயில்வே கேட்டில் ஊழியராக மனோஜ் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை பணியில் இருந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் ரெயில்வே கேட் மூடப்படுவது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் மனோஜை கல்லால் தாக்கி தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்