புதுவை சட்டசபை 30-ந்தேதி கூடுகிறது

கவர்னர் உரையை தொடர்ந்தோ அல்லது மறுநாளிலோ நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 3 அல்லது 4 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தெரிகிறது.
புதுவை சட்டசபை
புதுவை சட்டசபை
Published on

புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த 2011 முதல் இதுவரை முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முழு பட்ஜெட்டுக்கான பணிகள் நடக்கவில்லை.

இதனால் இந்த ஆண்டும் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட உள்ளது. மார்ச் 31-ந்தேதிக்குள் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) புதுவை சட்டசபை காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் தமிழிசை உரையாற்றுகிறார். கவர்னர் உரையை தொடர்ந்தோ அல்லது மறுநாளிலோ நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 3 அல்லது 4 மாதத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தெரிகிறது.

இதன்பின் ஜூன் அல்லது ஜூலை மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிருநாளில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com