search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிப்பட்டு அருகே போலீஸ் டி.எஸ்.பி.யின் தந்தை விபத்தில் பலி
    X

    பள்ளிப்பட்டு அருகே போலீஸ் டி.எஸ்.பி.யின் தந்தை விபத்தில் பலி

    • பலத்த காயம் அடைந்த மாணிக்கத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே மாணிக்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    திருத்தணி:

    பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது75). இவரது மகன் பாபு, வண்டலூரில் உள்ள போலீஸ் அகாடமியில் டி.எஸ்.பி.ஆக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சோளிங்கர்-பள்ளிப்பட்டு சாலையில் எதிரே உள்ள கடைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிப்பட்டு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென மாணிக்கம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த மாணிக்கத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே மாணிக்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பிய மேலப்புடி காலனியை சேர்ந்த ஒருவரை தேடிவருகிறார்கள். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×