search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப்பொருள் விழிப்புணர்வு- 60 கிராம நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை
    X

    போதைப்பொருள் விழிப்புணர்வு- 60 கிராம நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை

    • எண்ணூர் போலீசார் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம் நடைபெற்றது.
    • கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை யாராவது விற்பனை செய்தால் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுக்க வேண்டும்.

    திருவொற்றியூர்:

    எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள சமுதாயக்கூடத்தில் எண்ணூர் போலீசார் சார்பில் கிராம ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகிகளுடன் சமுதாய நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். இதில் 60 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் செங்குன்றம் துணை கமிஷனர் என். மணிவண்ணன் கலந்து கொண்டு போதையில்லா சமுதாயம் அமைந்திட அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்திட கிராம தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை யாராவது விற்பனை செய்தால் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுக்க வேண்டும். அவர்களது ரகசியம் பாதுகாக்கப்படும் என்றார். இதில் இன்ஸ்பெக்டர்கள் தட்சிணாமூர்த்தி, ஜி. கண்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் பி. வின்சன்ட் ராஜரத்தினம், எம்.ரகுநாதன் எஸ்.டி. சங்கர்,எம்.கோபால், சங்க இணை செயலாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×