கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்திய 72 பேர் மீது வழக்கு

காவல் உதவி எண்கள் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோரை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல் அதிகாரிகள், காவலர்கள் மாலை நேரத்தில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதால் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பொதுமக்களை பாதுகாக்க பொது இடங்களில் மது அருந்துவதை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் காவல் உதவி எண்களை அறிமுகம் செய்தார்.

காவல் உதவி எண்கள் மூலம் வந்த புகாரின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவோரை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல் அதிகாரிகள், காவலர்கள் மாலை நேரத்தில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதில் பொது இடங்களில் மது அருந்திய 72 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் இதுவரை காவல்துறையின் அறிவுரையை பின்பற்றாத 843 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

போலீசாரின் இத்தகைய நடவடிக்கை மூலம் கடலூர் மாவட்டத்தில் மாலை நேரங்களில் பொது இடங்களில் மது அருந்திவிட்டு அதன் காரணமாக ஏற்படும் காய வழக்குகள், கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சண்டை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள் காவல் நிலையங்களில் வழக்குபதிவு எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com