

சென்னை, தாம்பரம் இரும்புலியூரில் தனியார் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் புறப்பட்டதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதனால், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.