ஜிப்மரில் கட்டுப்பாடுகள் காரணமாக நோயாளிகள் அவதி

முன்பதிவு செய்யாவிட்டால் அனுமதியில்லை என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் ஜிப்மருக்கு வந்த நோயாளிகள் அவதிப்பட்டனர்.
ஜிப்மர் மருத்துவமனை
ஜிப்மர் மருத்துவமனை
Published on

புதுச்சேரி:

புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை உள்ளது. இங்கு புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், தொற்று பரவலை தடுக்க ஆஸ்பத்திரிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் கூட்டத்தை குறைக்க தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜிப்மர் டாக்டர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற விரும்பும் நோயாளிகள் ஜிப்மர் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.

அதன்பின் ஒவ்வொரு துறைக்கும் 50 நோயாளிகள் மட்டும் நேரடி வருகைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுதொடர்பான விவரங்கள் தமிழக பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சரிவர தெரியவில்லை.

இதன் காரணமாக பலர் தங்கள் உறவினர்களுடன் ஆஸ்பத்திரிக்கு வந்து அவர்களை அனுமதிக்காததால் ஏமாந்து செல்கின்றனர். ஏழை நோயாளிகள் நீண்ட தூரத்தில் இருந்து வந்தும் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர். நோயாளிகளுக்கான அனுமதி குறைக்கப்பட்டுள்ளதால் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கூட்டமும் குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com