பண்ருட்டி அருகே காளி கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்

கோவிலில் எந்த பொருட்களும் திருடு போகவில்லை. என்றாலும் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளையர்கள் புகுந்த கோவிலை படத்தில் காணலாம்.
கொள்ளையர்கள் புகுந்த கோவிலை படத்தில் காணலாம்.
Published on

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே விழமங்கலத்தில் பிரசித்திப்பெற்ற காளி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடிந்ததும் நடைசாத்தப்பட்டது. நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பொருட்கள் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துன் திரும்பினர்.

இன்று காலை பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா இன்ஸ்பெக்டர் சந்திரன், மற்றும் போலீசார் கோவிலுக்கு விரைந்தனர்.

கோவிலில் எந்த பொருட்களும் திருடு போகவில்லை. என்றாலும் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com