அரசு ஆஸ்பத்திரிகளில் 29-ந்தேதி புறநோயாளிகள் புறக்கணிக்கும் போராட்டம்- அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு

புதிய அரசு பதவியேற்ற உடன் அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்விற்கான அரசாணையை வெளியிட்டது.முக்கியமான இந்த 3 கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இலையென்றால் வருகிற 29-ந் தேதி புறநோயாளிகள் புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அரசு ஆஸ்பத்திரிகளில் 29-ந்தேதி புறநோயாளிகள் புறக்கணிக்கும் போராட்டம்- அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு
Published on

சென்னை:

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணா விரத போராட்டம் நடந்தது. மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ரவிசங்கர், செயலாளர்கள் டாக்டர் சீனிவாசன், ஜெஸ்வின், ஸ்ரீதர், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்காக அறிவித்த 293 அரசாணையை 21 மாதமாக அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதனை உடனே நிறைவேற்ற வேண்டும், முதமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கு இலக்கு வைத்திருப்பதை கண்டித்தும் இப்போராட்டம் நடந்தது.

தமிழகம் முழுவதும் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது:-

புதிய அரசு பதவியேற்ற உடன் அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்விற்கான அரசாணையை வெளியிட்டது. அதனை உடனே அமல்படுத்த வேண்டும். பிரசவத்தின் போது தாய்-சேய் உயிரிழப்பு ஏற்பட்டால் மாவட்ட கலெக்டர்கள் டாக்டர்களிடம் சென்று குற்றவாளி போல் கருதி செயல்படுகிறார்கள். அதனை கண்டிக்கிறோம்.

முக்கியமான இந்த 3 கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இலையென்றால் வருகிற 29-ந் தேதி புறநோயாளிகள் புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com