ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊராட்சி செயலாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் மனு

ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊராட்சி செயலாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புகார்
புகார்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியம் ஊ.அகரம் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது:-

கம்மாபுரம் ஒன்றியம் ஊ.அகரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறேன். எனது ஊராட்சிக்குட்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக எனது கணவரும், துப்புரவு பணியாளராக நானும் பணியாற்றினேன்.

இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக நான் போட்டியிட்ட போது எங்களை மக்கள் வெற்றி பெறச் செய்தார்கள். இந்த நிலையில் அதே கிராமத்தில் ஊராட்சி செயலாளராக உள்ள சுந்தரராஜன் அவருக்கு ஆதரவான ஒருவரை என்னை எதிர்த்து போட்டியிட்ட வைத்ததில் தோல்வி அடைந்தார்.

இந்த முன்விரோத காரணத்தினால் என்னை கேவலமாக திட்டி வருகிறார். மேலும் ஊராட்சி செயலாளர் சுந்தரராஜன் பணியாளர்களை அரசு பணியை சரிவர செய்ய விடாமல் தடுத்து வருகிறார். மேலும் கடந்த 2-ந் தேதி ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் ஒருவர் வேலைக்கு வரவில்லை.

இது சம்பந்தமாக கேட்டபோது சரியான முறையில் பதிலளிக்கவில்லை. அப்போது இது தொடர்பாக சுந்தரராஜன் என்னை தொடர்பு கொண்டு எனது உறவினர் பெண் என தெரிந்தும் இது சம்பந்தமாக ஏன் கேட்டீர்கள் என கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் ஒரே இடத்தில் 25 வருடங்களாக வேலை செய்து வருகிறேன்.

ஆகையால் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என கூறி வருகிறார். ஆகையால் என் பணியை செய்யவிடாமல் தடுப்பதோடு இழிவாக பேசி எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாக்கிவரும் சுந்தரராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com