என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் வடமாநில வாலிபர் அடித்துக்கொலை- போலீசார் விசாரணை
- சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி கூடுதல் எஸ்.பி. சந்தீஸ் மற்றும் புதுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
- துஷபன்ட் பேகரா அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தூத்துக்குடி:
ஒடிசா மாநிலம் கோவிந்தப்பூர் கஞ்சம் பகுதியை சேர்ந்தவர் துஷபன்ட் பேகரா (வயது 24). இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.
இதற்காக புதுக்கோட்டை பாத்திமா நகரில் ஒரு வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் இன்று காலை இவர் உடலில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி கூடுதல் எஸ்.பி. சந்தீஸ் மற்றும் புதுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது துஷபன்ட் பேகரா அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து துஷபன்ட் பேகராவை கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






