காரைக்கால் மாதாகோவில் வீதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு- பைனான்சியர் காவல்நிலையத்தில் புகார்

காரைக்கால் மாதாகோவில் வீதியில், ரூ.45 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தொடர்பாக, பைனான்சியர் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார்
புகார்
Published on

காரைக்கால்:

காரைக்கால் வேட்டைக்காரன் வீதியைச்சேர்ந்தவர் பைனான்சியர் சக்திவேல். இவரது மகன் செல்வபிரகாஷ்(வயது24) பி.காம் பட்டதாரியான இவர், காரைக்கால் மாதாகோவில்வீதி, பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் டைபிங் கற்றுவருகிறார். கடந்த 11ந் தேதி, வழக்கம் போல், மாதாகோவில் வீதியில் ரூ.45 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டைப்பிங்க்கிற்கு சென்றார். 

டைப்பிங் முடிந்தவுடன், வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நேற்று செல்வ பிரகாஷின் தந்தை சக்திவேல் காரைக்கால் நகர காவநிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் திருடனை தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com