search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிளை திருடி இன்ஸ்டாகிராமில் விற்க முயன்ற வாலிபர் கைது
    X

    கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிளை திருடி இன்ஸ்டாகிராமில் விற்க முயன்ற வாலிபர் கைது

    • போலீசார் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்குவது போல் சமூகவலைதள விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணில் பேசினர்.
    • கூட்டாளிகள் யார்?யார்? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி, ஸ்ரீபத்மா அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ரசாக். கல்லூரி மாணவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அப்துல்ரசாக்கின் மோட்டார் சைக்கிள் அதே பதிவு எண்ணுடன் விற்பனைக்காக சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதனை அறிந்த அப்துல்ரசாக் கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்குவது போல் அந்த சமூகவலைதள விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணில் பேசினர். அப்போது அதில் பேசிய வாலிபர் மோட்டார் சைக்கிள் விற்பனைக்காக மன்னார்குடியில் இருப்பதாக தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் மன்னார்குடிக்கு விரைந்து சென்று அப்பகுதியை சேர்ந்த முனீஸ் (23), என்பவரை கைது செய்தனர். அவர் மோட்டார் சைக்கிளை திருடி இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருட்டு மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய அதே பதிவு எண்ணுடன் படத்தை வெளியிட்டதால் அவர் சிக்கிக்கொண்டார். கைதான முனீஸ் இதுபோல் வேறு எந்தெந்த இடங்களில் கைவரிசை காட்டி உள்ளார். கூட்டாளிகள் யார்?யார்? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×