கல்லாவி அருகே தாய்-மகன் எரித்து கொலை: போலீசார் விசாரணை

கமலாவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். தாய்-மகன் இருவரும் கருகிய நிலையில் உடல் கிடந்தது. தடவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டது.
கல்லாவி அருகே தாய்-மகன் எரித்து கொலை: போலீசார் விசாரணை
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்துள்ள செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன். இவருக்கு 3 மனைவிகள் உள்ளன. இவரது முதல் மனைவி கமலா (வயது50). இவரது மகன் குரு (17). இவர் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று செந்தாமரைக்கண்ணனிடம், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டும். அதனால் அவரிடம் கமலா பணம் கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் மீண்டும் தகராறு நடந்தது.

இன்று காலை வெகுநேரமாகியும் கமலாவின் வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர்.

அப்போது கமலா, மகன் குரு ஆகிய 2 பேரின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே கல்லாவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கமலாவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். தாய்-மகன் இருவரும் கருகிய நிலையில் உடல் கிடந்தது. தடவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் கொலையா? தற்கொலை? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com