கோழிக்குஞ்சு வியாபாரிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோழிக்குஞ்சு வியாபாரிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே  சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த கோழிக்குஞ்சு வியாபாரிகள் தேவநாதன், அய்யனார் உள்ளிட்ட 20 பேர் கோழிக்குஞ்சு வியாபாரத்திற்காக  தஞ்சைக்கு சென்றிருந்தனர்.

வியாபாரம் முடித்து விட்டு வழக்கமாக சாலை ஓரத்தில் உள்ள மூடி இருக்கும் கடைகளின்முன்பு தூங்குவது வழக்கம்.

அதன்படி  தஞ்சாவூரில், பட்டுக்கோட்டை-மன்னார்குடி பைபாஸ் பாலத்தின் கீழ், கீழவச்சான் சாவடி என்ற இடத்தில் இரவு தூங்கி உள்ளனர். நள்ளிரவில்  அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் அங்கு வந்தனர். அவர்கள் வீச்சரிவாள் வைத்திருந்தனர்.

பின்னர் மர்மநபர்கள் கத்தியைகாட்டி கோழி வியாபாரிகள்  தேவநாதன், அய்யனார் ஆகியோரை மிரட்டி அவர்களிடமிருந்த பணம், செல்போன், துணிப்பை அனைத்தையும் பறித்து  சென்றனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகருகே படுத்து தூங்கிய மற்றவர்கள் ஓடி வருவதற்குள் மர்மஆசாமி கள் தப்பி ஓடினர்.  இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.

இது பற்றி கீழவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு  கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com