search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூர்-மாதவரத்தில் ரூ.3 கோடியில் உள்விளையாட்டு அரங்கம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்
    X

    திருவொற்றியூர்-மாதவரத்தில் ரூ.3 கோடியில் உள்விளையாட்டு அரங்கம்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

    • தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் முதல்வரின் அனுமதி பெற்று விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.
    • திருவொற்றியூர் பகுதியில் பரவி வரும் வாயு கசிவிற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. இ்ன்னும் ஒரு சில நாட்களில் அவை சரிசெய்யப்படும்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழகம் மற்றும் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 43-வது தென் மண்டல தேசிய பூப்பந்தாட்ட போட்டி திருவொற்றியூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    பகல்- இரவு போட்டியாக மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் இருந்து ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கு பெற்றன. வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கும், பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற கர்நாடக அணிக்கும் பரிசுத்தொகையாக தலா 50 ஆயிரம் மற்றும் கோப்பையை வழங்கினார்.

    விழாவில் வடசென்னை எம்.பி.டாக்டர் கலாநிதி வீராசாமி மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம், திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:- இந்ந தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று வெகுவிரைவில் திருவொற்றியூரிலும் மாதவரம் தொகுதியிலும் 3 கோடி ருபாய் அளவில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

    அதேபோல் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் முதல்வரின் அனுமதி பெற்று விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். திருவொற்றியூர் பகுதியில் பரவி வரும் வாயு கசிவிற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. இ்ன்னும் ஒரு சில நாட்களில் அவை சரிசெய்யப்படும் என்றார்.

    முன்னதாக பூப்பந்தாட்ட கழக மாநில பொதுச் செயலாளர் எழிலரசன், அனைவரையும் வரவேற்றார். முடிவில் மாரிமுத்து நன்றி கூறினார்.

    Next Story
    ×