search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அலங்காநல்லூர் அருகே மெக்கானிக் அடித்துக்கொலை- 2 வாலிபர்கள் கைது
    X

    அலங்காநல்லூர் அருகே மெக்கானிக் அடித்துக்கொலை- 2 வாலிபர்கள் கைது

    • ராமமூர்த்தியின் உறவினரான முத்துசெல்வி வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு வந்தார். அவரிடம் வாலிபர்களுடன் தகராறு ஏற்பட்டது குறித்து ராமமூர்த்தி கூறினார்.
    • இதையடுத்து முத்துசெல்வி மற்றும் ராமமூர்த்தி ஆகிய இருவரும் அந்த வாலிபர்களிடம் சென்று தகராறு செய்தனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் கொட்டகுடியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது38), டி.வி. மெக்கானிக். இவர் கடந்த சில நாட்களாக அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கிராமத்தில் வசித்துவரும் தனது உறவினரான முத்துசெல்வி வீட்டில் தங்கி இருந்தார்.

    அந்த வீட்டின் முன்பகுதியில் ஒரு புளியமரம் உள்ளது. அந்த மரத்தில் வாலிபர்கள் சிலர் கொக்கு பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று மதியம் வழக்கம்போல் அந்த வாலிபர்கள் சிலர் கொக்கு பிடிக்க வந்துள்ளனர்.

    அப்போது அங்கிருந்த ராமமூர்த்தி, இங்கெல்லாம் கொக்கு பிடிக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். இதனால் அந்த வாலிபர்களுக்கும், ராமமூர்த்திக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்தநிலையில் ராமமூர்த்தியின் உறவினரான முத்துசெல்வி வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு வந்தார். அவரிடம் வாலிபர்களுடன் தகராறு ஏற்பட்டது குறித்து ராமமூர்த்தி கூறினார். இதையடுத்து முத்துசெல்வி மற்றும் ராமமூர்த்தி ஆகிய இருவரும் அந்த வாலிபர்களிடம் சென்று தகராறு செய்தனர்.

    அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது கைகலப்பாக மாறியது. தொடர்ந்து அந்த வாலிபர்கள், ராமமூர்தியை கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்து முத்துசெல்வி அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ராமமூர்த்தி கொலை குறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அழகாபுரியை சேர்ந்த அன்பில் பொய்யாமொழி (23), சிந்தனை செழியன் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கொக்கு பிடிப்பதெற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்ததால் ராமமூர்த்தியை அடித்து கொன்றதாக அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். மெக்கானிக் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அலங்காநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×