

போரூர்:
அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் மாங்காடு பட்டூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி தனியார் கம்பெனி ஒன்றில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார்.
தினசரி பெற்றோர் வேலைக்கு சென்றவுடன் அதே பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயதான பள்ளி மாணவன், சிறுமியுடன் சேர்ந்து விளையாடுவது வழக்கம்.
இந்த நிலையில் விளையாடுவது போல நடித்து பள்ளி மாணவன் அடிக்கடி சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளான். இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் பூந்தமல்லி அனைத்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவனை கைது செய்தனர்.