மல்லாங்கிணறு பேரூராட்சி பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்

மல்லாங்கிணறு பேரூராட்சி பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது பாட்டில்கள்
மது பாட்டில்கள்
Published on

காரியாபட்டி:

 மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அருப்புக்கோட்டை தாலுகா மண்டல அலுவலர் முருகன் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு மல்லாங்கிணறு பகுதியில் தீவிர ரோந்துபணி செய்து வருகின்றனர். இந்நிலையில் மல்லாங்கிணறு அரசு மருத்துவமனை அருகில் பகுதியில் பறக்கும் படை அதிகாரி முருகன் தலைமையில் வாகன சோதனை செய்துகொண்டிருந்தபோது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த 16 மது பாட்டில்களை அதிகாரி பறிமுதல் செய்து மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com