தடையை மீறி மாடுவிடும் திருவிழா- பைக்கில் குழந்தையுடன் சென்ற தம்பதியை தூக்கி வீசிய காளை

கொளத்தூரில் காளை விடும் திருவிழா அனுமதியின்றி நடத்தியதாக விழாக்குழுவினர் ராஜேஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக்கில் குழந்தையுடன் சென்ற தம்பதியை தூக்கி வீசிய காளை
பைக்கில் குழந்தையுடன் சென்ற தம்பதியை தூக்கி வீசிய காளை
Published on

கண்ணமங்கலம்:

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மார்கழி மாதம் அமாவாசையில் கிராம பொதுமக்கள் காளை விடும் திருவிழா நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு காளை விடும் திருவிழா நடத்த அனுமதியில்லை. இந்த நிலையில் நேற்று கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கொளத்தூர் கிராமத்தில் அனுமதியின்றி காளைவிடும் திருவிழா நடத்தினர்.

இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.

அப்போது காளைகள் ஓடும்போது தடுத்து நிறுத்திய இளைஞர்களை காளைகள் முட்டியதில் ஒண்ணுபுரம் கிருஷ்ணமூர்த்தி (வயது65), களம்பூர் ஜோதிவாசன் (28) கோபிநாத் (18) நடுக்குப்பம் சுப்பிரமணி (17) உள்ப சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நெஞ்சை பதைபதைக்கும் சம்பவமாக காளை விடும் திருவிழாவின்போது மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற அதே ஊரை சேர்ந்த ராஜேஷ், அவரது மனைவி ‌ஷர்மிளா ஆகியோர் மீது காளை வேகமாக மோதி முட்டித்தள்ளியது.

இதில் ராஜேஷ் லேசான காயங்களுடன் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது சம்பந்தமாக கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் கொளத்தூரில் காளை விடும்  திருவிழா அனுமதியின்றி நடத்தியதாக விழாக்குழுவினர் ராஜேஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com