காரைக்காலில் நிலுவை ஊதியத்தை வழங்க கோரி உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
Published on

காரைக்கால்:

காரைக்கால் நகராட்சி வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள் கூட்டு போராட்டக்குழு அமைப்பாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.

காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன் உள்ளிட்ட பலர், கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குரிய பணப்பலன்கள் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளன. எனவே இதை சரிசெய்ய, புதுச்சேரி பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கி அரசே நேரடியாக உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய நிலுவை, பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com