தவறான சிகிச்சையால் சிறுமி பலி- இங்கிலாந்து டாக்டரின் சான்றிதழை பயன்படுத்தி மருத்துவம் பார்த்த போலி டாக்டர்

தவறான சிகிச்சை மூலம் சிறுமி பலியான சம்பவம் குறித்து போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலி டாக்டர்
போலி டாக்டர்
Published on

கடலூர்:

கடலுார் மாவட்டம், வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். அவரது மகள் லட்சிதா. (வயது 5)இவருக்கு, உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த 7-ந் தேதி, வேப்பூரில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, மருத்துவராக இருந்த சத்தியசீலன் சிகிச்சை அளித்தார்.

ஆனால் சிறுமி லட்சிதா உயிரிழந்தார். இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தவறான சிகிச்சையால் தங்களது மகள் இறந்து விட்டதாக பெற்றோர் ஆதங்கப்பட்டனர்.

இதுபற்றி மருத்துவ அதிகாரிகள், மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

விசாரணையில், சத்தியசீலன் போலி மருத்துவர் என தெரியவந்தது.இதனை தொடர்ந்து கடலுார் மாவட்டம், நல்லுார் வட்டார மருத்துவ அதிகாரி தமிழரசன், அந்த மருந்தகத்திற்கு சென்றார். அதை அறிந்தசத்தியசீலன், தப்பி ஓடி விட்டார்.

அப்போது சத்தியசீலன் வைத்திருந்த சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், திருச்சி மாவட்டம், காட்டுப்புதுார் முகவரியில் இருந்த ஜெயசீலன் என்பவரின் மகன் பெயரும் சத்தியசீலன் என்பதுதெரிந்தது.

தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்.,மற்றும் எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனையில், குழந்தைகள் மருத்துவம் அவர் படித்துள்ளார். தற்போது இங்கிலாந்தில் பணி புரிகிறார்.இவரது, மருத்துவ சான்றிதழ்படிப்பு போலியாக பயன்படுத்தி 5 ஆண்டுகளாக,வேப்பூர்’ சத்தியசீலன் மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com