search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடுமுடி அருகே திருவிழா பந்தல் அமைப்பாளர் வீட்டில் தீ விபத்து
    X

    கொடுமுடி அருகே திருவிழா பந்தல் அமைப்பாளர் வீட்டில் தீ விபத்து

    • சிறிது நேரத்தில் அவர் வீட்டில் இருந்து தீ மளமளவென பிடித்து எரிந்தது.
    • தீ விபத்து நடந்த போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சாலைப்புதூர் பகுதியில் குடியிருப்பவர் கிருஷ்ணன் (70). இவர் திருவிழா பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு கிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று விட்டார்.

    அப்போது அவர் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் வீட்டில் இருந்து தீ மளமளவென பிடித்து எரிந்தது.

    கிருஷ்ணன் வீட்டில் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    எனினும் இந்த விபத்தில் வீடு தீப்பிடித்து சேதம் அடைந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்க பணம் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இது தவிர வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள், வீட்டு சமையல் அறையில் இருந்த சாமான் பாத்திரங்கள் வீட்டிலிருந்த கட்டில், பீரோக்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    நல்ல வேலையாக தீ விபத்து நடந்த போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    Next Story
    ×