search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணி- 	மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்
    X

    காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணி- மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்

    • காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம். சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
    • என் குப்பை. என் பொறுப்பு. எனும் திட்டத்தின் கீழ் அனைவரும் மேயர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணியினை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் துவக்கி வைத்தார்.

    கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் பல நூறு கோவில்களை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட, வெளிமாநில பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம். சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இக்குளத்தில் நீராடிய பின் காஞ்சி ஏகாம்பர நாதரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம் மேலும் ஏகாம்பரநாதர் பங்குனி திருக்கல்யாண உற்சவத்தின் போது தீர்த்தவாரி நிகழ்ச்சி இங்கு நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இத்திருக்குளத்தில் நீத்தார் ஈம சடங்குகளை நடத்தி வழிபாடு செய்வது வழக்கம் மேலும் கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்கள் இதில் மிதந்துள்ளதால் பக்தர்கள் நீராட செல்வதில்லை.

    இதனை தூய்மைப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி தன்னார்வர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியை மேயர் மகாலட்சுமி துவக்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து என் குப்பை. என் பொறுப்பு. எனும் திட்டத்தின் கீழ் அனைவரும் மேயர் தலைமையில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்

    காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திருக்குளத்தில் மிதந்து கிடந்த கழிவுகள் மற்றும் நடைபாதைகள் இருந்த கழிவுகள் என அனைத்தையும் அகற்றும்பணியில் ஈடுபட்டனர்.

    இது போன்று மாநகராட்சி பகுதிகளில் உள்ள திருக்குளங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தி பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் தொடர்ச்சியாக செவிலிமேடு, சதாவரம் ஆகிய பகுதிகளிலும் குளங்கள் தூர் வாரப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆய்வாளர்கள் தன்னார்வ தொண்டு அமைப்பு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×