search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் பள்ளி வன்முறை சம்பவத்தில் இதுவரை 317 பேர் கைது
    X

    சின்னசேலம் பள்ளி வன்முறை சம்பவத்தில் இதுவரை 317 பேர் கைது

    • சின்னசேலம் பள்ளி வன்முறையில் ஈடுபட்ட 317 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.
    • தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி (வயது 17) மர்மமான முறையில் இறந்தார். பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 17-ந்தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியில் இருந்த பஸ், காவல்துறை பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வன்முறையாளர்கள் எரித்தனர். இந்நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபினவ் தலைமையில் 2 போலீஸ் சூப்பிரண்டுகள், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 6 துணை போலீஸ் சூப்பிரண்டு, 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 150 போலீசார் நியமிக்கப்பட்டனர்.

    இவர்கள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்தும், அந்த இடத்தில் செல்போன் கோபுரங்களில் பதிவான பெயர்களை கண்டுபிடித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் தனியார் பள்ளி முன்பும், கனியாமூர் நான்கு முனை சந்திப்பு, சின்னசேலம் சாலை பங்காரம் சாலை கச்சிராயபாளையம் சாலை உள்ளிட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.

    அதன்படி வன்முறையில் ஈடுபட்ட 309 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் வன்முறையின் போது பள்ளி சொத்துகளை உடைத்து சேதப்படுத்தியதாக சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (24),கார்த்திக் (24) கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (20), கமல் ராஜ் (21), ஸ்ரீதர் (20), சத்தியமூர்த்தி (22), பாலமூர்த்தி (22), மற்றும் போலீஸ் வாகனத்தை அடித்து உடைத்து சேதப்படுத்திய கடலூர் மாவட்டம் சிறுகிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அதன்படி இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 317 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×