search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தவில்லை என கூறி மனைவியை அவதூறாக பேசியதால் தொழிலாளி தற்கொலை முயற்சி
    X

    விஷம் குடித்த இசக்கி

    வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தவில்லை என கூறி மனைவியை அவதூறாக பேசியதால் தொழிலாளி தற்கொலை முயற்சி

    • பெண் இசக்கியிடம் அவரது மனைவியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது
    • தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளம், நேரு தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 32). தொழிலாளி.

    இவர் தனது குடும்ப செலவுக்காக கடந்த ஆண்டு கீழதுவரைகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதம் தோறும் ரூ.2,500 வட்டி செலுத்தி வந்தார். இந்நிலையில் இந்த மாதம் வட்டி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து அந்த பெண் இசக்கி வீட்டிற்கு சென்று, அவரது மனைவி எஸ்தர் மரியாவிடம்(25) வட்டி கேட்டு அவதூறாக பேசியுள்ளார். இதுபற்றி எஸ்தர் மரியா தனது கணவர் இசக்கியிடம் கூறினார்.

    இதனைதொடர்ந்து இசக்கி அந்த பெண்ணிடம் இதுபற்றி கேட்டார். அப்போதும் அந்த பெண் இசக்கியிடம் அவரது மனைவியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து இசக்கி களக்காடு போலீசிலும் புகார் செய்தார்.

    இதற்கிடையே மனைவியை அவதூறாக பேசியதால் இசக்கி மனம் உடைந்தார். நேற்று இரவில் இசக்கி திடீரென விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவருக்கு 4 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளது. கடன் தகராறில் பெண், மனைவி குறித்து ஆபாசமாக பேசியதால் மனம் உடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×