பெருந்துறை அருகே கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை

பெருந்துறை அருகே குடும்ப தகராறில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக காஞ்சி கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிகோவில் அடுத்த பள்ளபாளையம், குண்டுமல்லநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன குப்ப நாயக்கர் (57). இவரது மனைவி பொன்னம்மாள். இவர்களது மகன் தங்கராசு.

இந்நிலையில் தங்கராசுக்கு திருமணமாகி தாய், தந்தை வசிக்கும் பக்கத்து வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். தங்கராசு மனைவிக்கு கருசிதைவு ஏற்பட்டு தற்போது அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தங்க ராசுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் பெற்றோர்கள் இருவரும் மனவேதனையுடன் இருந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம்போல் தங்கராசு தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் தற்கொலை செய்ய முடிவெடுத்த சின்னகுப்பநாயக்கர், பொன்னம்மாள் ஆகியோர் விஷம் குடித்து மயங்கினர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com