search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி-  திருப்பூர் வாலிபரை காரில் கடத்திய 5 பேர் கும்பல் கைது
    X

    புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி- திருப்பூர் வாலிபரை காரில் கடத்திய 5 பேர் கும்பல் கைது

    • பாலாஜி கதிரவனிடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் பெற்று தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
    • 5பேரும் சேர்ந்து பாலாஜியை காரில் கடத்தி சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அண்ணாநகர் 2-வது வீதியை சேர்ந்த கருப்புசாமி மகன் பாலாஜி (வயது 33). இவரை ஒரு கும்பல் நேற்று காரில் கடத்தி செல்வதாகவும், அவரை மீட்கு மாறும் ஈரோடு மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு திருப்பூர் மாவட்ட போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்தநிலையில் ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சின்னப்பள்ளம் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    அப்போது ஒரு காரில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பாலாஜி இருந்தார். அவரை போலீசார் மீட்டனர். மேலும் அவரை கடத்தி சென்ற கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சைதலியை சேர்ந்த சிவக்குமார் (35), கோவிந்தராஜ் (36), சபியுல்லா (30), குட்டூரை சேர்ந்த பிரபு (29) , செம்ப டம்புத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் (36) ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.

    5பேரும் பாலாஜியை கடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சாமியார் கதிரவன் தன்னிடம் புதையல் இருப்பதாகவும் ரூ.35 லட்சம் தந்தால் அதனை எடுத்து கொடுப்பதாக தனது நண்பரான பாலாஜியிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து அவர் கடத்தல் வழக்கில் கைதான சிவக்குமார், கோவிந்தராஜ், சபியுல்லா, பிரபு, ராமச்சந்திரன் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய 5பேரும் ரூ.35 லட்சத்தை பாலாஜியிடம் கொடுத்துள்ளார். அதனை அவர் சாமியார் கதிரவனிடம் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட கதிரவன் தலைமறைவாகி விட்டார். நீண்ட நாட்களாகியும் பாலாஜி புதையலை எடுத்து கொடுக்காததால் நேற்று 5 பேரும் பாலாஜியை தேடி திருப்பூர் வந்துள்ளனர். அப்போது 5 பேரும் புதையலை கொடுக்கா விட்டால் ரூ.35 லட்சத்தை திருப்பி கொடுக்குமாறு பாலாஜியிடம் கேட்டுள்ளனர். பாலாஜி கதிரவனிடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் பெற்று தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் 5பேரும் சேர்ந்து பாலாஜியை காரில் கடத்தி சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணத்துடன் மாயமான கதிரவனையும் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×