சிறுமியை கடத்தி கட்டாய திருமணம்- 4 பேர் கைது

கடலூர் முதுநகரை சேர்ந்த சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கடலூர் முதுநகர்:

கடலூர் முதுநகரை சேர்ந்தவர் குணசேகரன் மகன் கருணை ஜோதி (வயது 28). இவருக்கும் கடலூர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். இதில் சிறுமிக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. இதனால் கருணை ஜோதி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அந்த சிறுமியை கடத்திச் சென்று மேல்மலையனூரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு சிறுமியின் பெற்றோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த சிறுமியின் அக்காள், அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கருணைஜோதி மற்றும் அவரது உறவினர்கள் சிறுமியின் சகோதரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர் கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கருணை ஜோதி, குணசேகரன் (62), இவரது மனைவி நாகமணி, மகன் கருணாகரன் (38), பாலு மனைவி அன்னலட்சுமி, சிறுமியின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கருணைஜோதி, குணசேகரன் மற்றும் சிறுமியின் தாய், தந்தை ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com