search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
    X

    உயிரிழந்த மீனவர் ஜவகர்.

    தூத்துக்குடி கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

    • ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கடலில் வரும்போது படகில் இருந்த ஜவகர் தவறி கடலில் விழுந்தார்.
    • கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜவகர் ( வயது 29). மீனவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 வயதில் மகள் உள்ளனர்.

    இந்நிலையில் ஜவகர் கடந்த 7-ந் தேதி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து 8 பேருடன் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றார்.

    அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கடலில் வரும்போது படகில் இருந்த ஜவகர் தவறி கடலில் விழுந்தார். இதனை கண்ட சக மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து ஜவகரை மீட்டு அவரை படகில் ஏற்றினர். அப்போது ஜவகர் பேச்சு, மூச்சு இன்றி கிடந்துள்ளார்.

    இதனையடுத்து அவர்கள் விரைவாக படகை செலுத்தி தூத்துக்குடிக்கு அரசு மருத்துவமனைக்கு ஜவகரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜவகர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×