search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில் பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய நிதிநிறுவன உரிமையாளர் கைது
    X

    சிதம்பரத்தில் பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய நிதிநிறுவன உரிமையாளர் கைது

    • தமிழ்செல்வி சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து நிதிநிறுவன உரிமையாளர் வெங்கடேசனை கைது செய்தனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் கோவிந்தசாமித் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 50). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2002-ம் ஆண்டு ரூ.22 ஆயிரம் கடன் வாங்கினார். இதுவரை ரூ.79 ஆயிரம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நிதிநிறுவன உரிமையாளர் வெங்கடேசன் (34), ஊழியர் சபரீஷ் ஆகியோர் தமிழ்செல்வி வீட்டுக்கு வந்து மேலும் ரூ.40 ஆயிரம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வி சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து நிதிநிறுவன உரிமையாளர் வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கையெழுத்திட்ட ஏராளமான வெற்று பத்திரத்தை பறிமுதல் செய்தனர். சிதம்பரத்தில் கந்துவட்டி தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    Next Story
    ×