search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்புகளை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்புகளை ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி கரும்புகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டகுடியில் திருஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த சர்க்கரை ஆலையை நிர்வாகம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.115 கோடி வழங்கவில்லை. மேலும் 2018 ஆம் ஆண்டு இந்த ஆலை நிர்வாகம் ஆலையை நிரந்தரமாக மூடியது. மேலும் ஆலை நிர்வாகம், விவசாயிகளின் பெயரில் மோசடியாக வங்கிகளில் சுமார் பல கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.

    எனவே ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரியும் கடந்த 8 மாதங்களாக அந்த ஆலை முன்பு தொடர் போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி இன்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க காசிநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் முன்னிலை வகித்தார்.

    இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன், கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி கரும்புகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×