எண்ணூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி முதியவர் பலி

பாட்னா ஹம்சபர் ரெயில் முதியவர் மீது மோதியது. ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எண்ணூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி முதியவர் பலி
Published on

எண்ணூர் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 72 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த பாட்னா ஹம்சபர் ரெயில் முதியவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியான முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com