search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிரைண்டரில் மாவு அரைத்த போது மின்சாரம் தாக்கி பெண் பலி
    X

    கிரைண்டரில் மாவு அரைத்த போது மின்சாரம் தாக்கி பெண் பலி

    • மின்சாரம் தாக்கிய பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
    • போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை கே.கே. நகர் ராணி அண்ணா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வசந்தி (47). இவர் நேற்று மாலை வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்து கொாண்டிருந்தார்.

    அப்போது மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சுவிட்ச் ஆப் செய்ய சென்ற வசந்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பாராத அவர் தூக்கி வீசப்பட்டார். மின்சாரம் தாக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதை தொடர்ந்து கே.கே. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராதாகிருஷ்ணன்-வசந்தி தம்பதிக்கு யுவஸ்ரீ(20) என்ற மகளும், விக்னேஷ் (18) என்ற மகனும் உள்ளனர்.

    Next Story
    ×