search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி
    X

    ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி

    • குணசேகரனின் இடது பக்க இடுப்பு பகுதிக்கு மேல் மின் கம்பி எதிர்பாராதவிதமாக உரசியதில் மின்சாரம் தாக்கி 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
    • குணசேகரனை தனியார் ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வேலம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (44). இவர் அவல்பூந்துறை உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் ஓயர்மேனாக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் அவல் பூந்துறை-ஈரோடு சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பீஸ் நிற்காததால் வந்த புகாரை தொடர்ந்து குணசேகரன் அங்கு பழுதினை சரி செய்ய அவருடன் பணியாற்றும் கம்பியாளரான பழனிசாமி என்பவருடன் சென்றார். குணசேகரன் சோளிபாளையம் பெட்ரோல் பங்க் அருகே 30 அடி உயரமுள்ள இரும்பு மின் கம்பத்தில் ஏறிய பழுதினை சரி செய்து கொண்டார்.

    அப்போது குணசேகரனின் இடது பக்க இடுப்பு பகுதிக்கு மேல் மின் கம்பி எதிர்பாராதவிதமாக உரசியதில் மின்சாரம் தாக்கி குணசேகரன் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதைப்பார்த்த பழனிசாமி உதவி செயற்பொறியாளர் சென்னிகிருஷ்ணனுக்கு தகவல் அளித்தார்.

    இதையடுத்து குணசேகரனை தனியார் ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குணசேகரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×