search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாநகர், தேனாம்பேட்டை, அடையார் உள்ளிட்ட 7 பகுதிகளில் குடிநீர் நிறுத்தம்
    X

    அண்ணாநகர், தேனாம்பேட்டை, அடையார் உள்ளிட்ட 7 பகுதிகளில் குடிநீர் நிறுத்தம்

    • செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்துறையினர் மேற் கொள்ள உள்ளனர்.
    • பொதுமக்கள் முன்எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்துறையினர் மேற் கொள்ள உள்ளனர். இதன் காரணமாக பகுதி 7, 8, 9, 10, 11, 12 மற்றும் 12 பகுதிக்குட்பட்ட இடங்களில் குடிநீர் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறுக்கு உட்பட்ட பகுதிகளில் 14-ந்தேதி காலை 7 மணிமுதல் மாலை 7 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் முன்எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in என்ற இணைய தள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவித தடையும் இல்லாமல் வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×