என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாலிகிராமத்தில் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி கார் கண்ணாடி உடைப்பு
- ஆர்.கே. செல்வமணி வீட்டின் அருகே உள்ள அபுசாலி சாலையில் அவரது காரை டிரைவர் பாலமுருகன் நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்றார்.
- சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு டிரைவர் பாலமுருகன் அதிர்ச்சி அடைந்தார்.
போரூர்:
பிரபல சினிமா டைரக்டர் ஆர்.கே.செல்வமணி. இவர் பெப்சி அமைப்பின் தலை ராகவும், டைரக்டர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவரது வீடு மற்றும் அலுவலகம் சென்னை சாலிகிராமம் கண்ணம்மாள் தெருவில் உள்ளது. நேற்று மாலை ஆர்.கே. செல்வமணி வீட்டின் அருகே உள்ள அபுசாலி சாலையில் அவரது காரை டிரைவர் பாலமுருகன் நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்றார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு டிரைவர் பாலமுருகன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் கல்லால் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கிவிட்டு தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து அந்த மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்